-
கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்
கரையோரப் பாதையில் உள்ள புகையிரத பாதைகளில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் புகையிரதம் இயங்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய நிகழ்வு
'சாஸ்வதம்' உலக பாரம்பரிய நடனம் 2024 நாட்டிய நிகழ்ச்சி லண்டன் பாரதிய வித்யா பவனில் நாளை 30ஆம் திகதி சனிக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
-
மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசில்கள் வழங்கப்படும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
-
இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதி
தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக விளையாட்டு இல்லங்கள் தாயார் செய்வதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்களுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
-
காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் அனுப்புங்கள் -இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும் பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
-
தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம் தலைமையில் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் - யஹியாகான்
பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் தலைமையில் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
-
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; சந்தேகநபர் கைது!
லுணுகம்வெஹர, பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய திறமையுடைய எவரும் கட்சியில் இல்லை என தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க இதன் காரணமாக கட்சி தனது வேட்பாளரை நிறுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.