27.03.2018 ஏவிளம்பி வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கிலபட்ச ஏகாதசி திதி பின்னிரவு 12.44 வரை. அதன் மேல் துவாதசி திதி. பூசம் நட்சத்திரம் பகல் 10.40 வரை. பின்னர் ஆயிலியம் நட்சத்திரம். சிரார்த்த திதி, வளர்பிறை ஏகாதசி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: பூராடம். சுபநேரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் –வடக்கு (பரிகாரம்– பால்) ஸர்வ ஏகாதசி விரதம். இன்று உபவாஸமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடுதல் நன்று.
மேடம் : உயர்வு, மேன்மை
இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : சுபம், மங்களம்
கன்னி : தனம், சம்பத்து
துலாம் : வரவு, இலாபம்
விருச்சிகம் : முயற்சி, முன்னேற்றம்
தனுசு : ஓய்வு, அசதி
மகரம் : இலாபம், லஷ்மீகரம்
கும்பம் : தனம், சம்பத்து
மீனம் : இலாபம், லஷ்மீகரம்
தனரேகையும் அதன் அதிகாரமும், “படித்தறம் பிரபுத்தானம் பண நிதி இருப்புத்தானம் கொடு நிதி புழக்கத்தானம் கும்பிடு துரை சேர்தானம் நெடுந்தொழில் பெரிய தானம் நேரிடக் காட்டும். தொடு முடி ரவி மேடேறும் தூய தனரேகை தானே” ஆயுள் ரேகையிலிருந்து பிரிந்து சூரியமேட்டை நோக்கிச் செல்லும் ரேகை தனரேகை எனப்படும். பிரபுத்தனம், மதிப்புத்தனம், செல்வ இருப்பு, பணப்புழக்கம், கும்பிடு துரைதனம் விளக்கங்களை காட்டும். நாளை துரதிர்ஷ்ட ரேகையைப் பற்றிய விளக்கங்கள் தொடரும்.
(“அதிர்ஷ்ட தேவதை அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவ மாட்டார்கள்”– ட்ரைடன்)
செவ்வாய், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று,
அதிர்ஷ்ட எண்கள்: 9, 5
பொருந்தா எண்கள்: 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)