23.03.2018 ஏவிளம்பி வருடம் பங்குனி மாதம் 09 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கிலபட்ச சஷ்டி திதி பகல் 12.15 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 5.03 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி, மரணயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: விசாகம், அனுஷம். சுபநேரங்கள்: பகல் 12.30 – 1.30, மாலை 04.30– 05.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 09.00 வாரசூலம் –மேற்கு. (பரிகாரம் – வெல்லம்) சஷ்டி விரதம். நேசனார் நாயனார் குருபூஜை. ரோகிணி நட்சத்திரம். துவாரகா நிலைய வாசனான கண்ணனை வழிபடுதல் நன்று.
மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்
இடபம் : நன்மை, யோகம்
மிதுனம் : இலாபம்,லக் ஷ்மீகரம்
கடகம் : செலவு, விரயம்
சிம்மம் : வரவு, இலாபம்
கன்னி : சுகம், ஆரோக்கியம்
துலாம் : சுபம், மங்களம்
விருச்சிகம் : புகழ், பெருமை
தனுசு : உயர்வு, மேன்மை
மகரம் : நலம், ஆரோக்கியம்
கும்பம் : நட்பு, உதவி
மீனம் : அமைதி, தெளிவு
“ஆதிரேகை சாஸ்திரம்” இருதய ரேகை அதன் அதிகாரம் “புரிமுடங் காட்-டும் அன்னார் புதன், சனி திரட்டினோடு ரவிதிடல் கீழிருப்பது இருதய ரேகை தானே” ஒருவருக்கு புதன், சூரியன், சனி மேடுகளுக்கு கீழே உள்ள பெரிய ரேகை இருதய ரேகை. இந்தரேகை வாழ்க்கை நாய், பாம்பு,¸விஷக்கடி, பெண்நோய் மாரடைப்பு, பக்கவாதம், இதனால் ஏற்படும் பாரிசவாதம், முடம், தற்கொலை, அங்கபேதம், இதய அறுவைசிகிச்சை முதலிய விளக்கங்கள் அனைத்தும் காட்டும். நாளை புதன் ரேகை பற்றிய விளக்கங்கள் தொடரும்.
புதன் (5), சூரியன் (1) கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9, 5
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)