30.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
Published on 2016-08-30 09:06:33
கிருஷ்ணபட்ச திரயோதசி திதி மாலை 3.21 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி பூசம் நட்சத்திரம் பகல் 11.14 வரை. பின்னர் ஆயில்யம். சிரார்த்த திதி தேய்பிறை திரயோதசி சித்தயோகம். மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம் சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம், 12.00 – 1.30, வார சூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) மாத சிவராத்திரி புகழ்த்துணையர், அதிபத்தர் நாயன்மார் குருபூஜை.
மேடம் கஷ்டம், கவலை
இடபம் நன்மை, அதிர்ஷ்டம்
மிதுனம் கவனம், எச்சரிக்கை
கடகம் நற்செயல், பாராட்டு
சிம்மம் உயர்வு, மேன்மை
கன்னி அச்சம், பகை
துலாம் தெளிவு, பகை
விருச்சிகம் காரியசித்தி, அனுகூலம்
தனுசு பக்தி, யோகம்
மகரம் குழப்பம், சஞ்சலம்
கும்பம் செலவு, விரயம்
மீனம் புகழ், பாராட்டு
பெரியாழ்வார் அருளிய முதற்பத்து பாசுரம் “நாந்தகம் ஏந்திய நம்பி” சரனென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம்புல்குவான். பொருளுரை– நாந்தகம் (வாள்) ஏந்திய நம்பி! நீ மட்டும் எனக்கு துணையிருந்தால் போதும் என்று வேண்டிய பார்த்தனுக்கு சாரதியாக இருந்து பகை மன்னர்கள் கலங்கும் படி குருசேஷ்த்திரத்தில் தேரை செலுத்தியன் தேவர்கள் தலைவன். துவாரகா கண்ணன் பின்னால் வந்து தனது மார்பு எனது முதுகில் படும்படி தழுவிக் கொள்வான். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
(“மற்றவர் வாழ்வோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காமல் உங்கள் வாழ்க்கையை ரசியுங்கள்”)
குரு, சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3
பொருந்தா எண்கள்: 6, 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிகப்பு, வெளிர் மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)