சுக்கில பட்ச சதுர்த்தி திதி மாலை 5.43 வரை. பின்னர் பஞ்சமி திதி. திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 3.55 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்– கேட்டை. சுபநேரங்கள் காலை 7.30– 8.30, பகல் 10.30 –11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30இ வார சூலம் வடக்கு (பரிகாரம் -–பால்) எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி தினம் சதுர்த்தி விரதம் விறல் மிண்டர் நாயனார் குருபூஜை.
மேடம் : இன்பம், மகிழ்ச்சி
இடபம் : அன்பு, இரக்கம்
மிதுனம் : உயர்வு, மேன்மை
கடகம் : நட்பு, உதவி
சிம்மம் : அன்பு, ஆதரவு
கன்னி :பிரயாணம், அலைச்சல்
துலாம் :காரியசித்தி, அனுகூலம்
விருச்சிகம் : லாபம், லஷ்மீகரம்
தனுசு : நற்செயல், பாராட்டு
மகரம் :களிப்பு, கொண்டாட்டம்
கும்பம் : சுகம், ஆரோக்கியம்
மீனம் : தனம், சம்பத்து
திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் பாசுரம் – “மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்”– பொருளுரை– சமஸ்கிருத எழுத்துக்களில் 33 மெய் எழுத்துக்களும் 16 உயிர் எழுத்துக்களும் “ள” கரம் முதலிய 5 எழுத்துக்களுக்கும் நீயே அதிகாரி. ரிக், யஜுர், சாமம் என்கிற 3 வேதங்களின் வடிவம் நீ. நான்கு மூன்றுகளையும் இணைத்து பன்னிரண்டாக்கி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்கிற துவாதச அட்சரமாகி அருள் புரிபவனும் நீயே! அ, உ, ம என்கிற மூன்றாய் பிரிந்து ஒன்றாய் ஒலிக்கும் பிரணவ ஜோதியும் நீயே! என்றும் அழிவற்ற அறிவாக விளக்காக எனக்குள் நீ புகுந்தது எதற்காக? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
(“அன்புச் சுவையை பருக விரும்பினால் ‘நான்’ என்ற உணர்ச்சியை துறக்க வேண்டும். ஒரே உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது”)
சூரியன்இ சுக்கிரன் ஆதிக்கமுள்ள இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
பொருந்தா எண்கள்: 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)