16.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 03ஆம் நாள் திங்கட்கிழமை
கிருஷ்ண பட்ச ஸப்தமி திதி காலை 9.51 வரை. அதன்மேல் அஷ்டமி திதி. கேட்டை நட்சத்திரம். மாலை 5.06 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை அஷ்டமி. சித்தாமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் – பரணி, கார்த்திகை. சுபநேரங்கள் காலை 9.30. – 10.30 மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 7.30 – 9.00. எமகண்டம் 10.30 – 12.00. குளிகைகாலம் 1.30 – 3.00. வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்).
மேடம் :அதிர்ஷ்டம், வெற்றி
இடபம் :வரவு, இலாபம்
மிதுனம் :சங்கடம், கவலை
கடகம் :கவனம், அவதானம்
சிம்மம் :நலம், ஆரோக்கியம்
கன்னி :விவேகம், வெற்றி
துலாம் :முன்னேற்றம், திறமை
விருச்சிகம் :ஜெயம், புகழ்
தனுசு :பயம், பகை
மகரம் :உயர்வு, மேன்மை
கும்பம் :மகிழ்ச்சி,முன்னேற்றம்
மீனம் :நஷ்டம், கவலை
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கர்ம விபாகத்தில் சகஸ்ரநாம சாந்தி. இதில் சாதாதபர் சொன்ன பல கொடிய ஜுரஸ்களுடைய நிவர்த்திக்கான ப்ரகர்ணத்தில் 'தேவத் நம ஹரஸ்யைவ ஜாயந்தே விவித ஜ்வாராய' தத் பரிஹாரத்தம் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்ய வேண்டும் என்றும் அதன்மூலம் வைத்தியர்கள் கண்டுபிடிக்க முடியாத விஷ நோய்கள் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மருந்து இல்லாத பல நோய்கள் நம்மை பீடித்திருந்தால் அவை விஷ்ணு சகஸ்ர நாம பாராயணத்தால் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. வழிகள் இருக்க வருந்துவதேன்.
கேது, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் –1, 5, 2பொருந்தா எண்கள் –7, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)