13.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பகல் 2.51 வரை. அதன்மேல் பஞ்சமி திதி. சுவாதி நட்சத்திரம் முன்னிரவு 7.43 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். திதித்வயம். சிரார்த்த திதிகள் தேய்பிறை சதுர்த்தி, பஞ்சமி. சித்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, ரேவதி. சுபநேரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30–5.30 ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 3.00–4.30 குளிகைகாலம் 7.30–9.00. வாரசூலம்–மேற்கு (பரிகாரம்– வெல்லம்) விவாக சுபமுகூர்த்த நாள்.
மேடம் : செலவு, பற்றாக்குறை
இடபம் : திறமை, முன்னேற்றம்
மிதுனம் : பொறுமை, அமைதி
கடகம் : காரியசித்தி, பொருள்வரவு
சிம்மம் : மகிழ்ச்சி, உற்சாகம்
கன்னி : சிக்கல், குழப்பம்
துலாம் : சோர்வு, அசதி
விருச்சிகம் : அதிர்ஷ்டம், நன்மை
தனுசு : புகழ், பெருமை
மகரம் : நலம், ஆரோக்கியம்
கும்பம் : விரயம், செலவு
மீனம் :அதிர்ஷ்டம், காரியசித்தி
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை “மற்றுமோர் தெய்வமுண்டே? மதியிலா மானிடங்காள்! உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணர மாட்டீர். அற்றமேலொன்றறீர். அவனல்லால் தெய்வமில்லை. கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின்நீரே” மதிகெட்ட மனிதர்களே! கன்றுகளை மேய்த்த துவாரகை கிருஷ்ணனை தவிர வேறு தெய்வமுண்டோ? ஆபத்து வரும்போது மட்டும் ஸ்ரீமன் நாராயணனை நம்புகிறீர்கள். மற்ற சமயம் அவனை நினைப்பதில்லை வேதப்பொருளே அவன்தான். அவனன்றி தெய்வமில்லை. அவனது திருவடிகளை சரணடையுங்கள்.
(“நோக்கத்தை வாளால் சாதித்துக்கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக்கொள்வது சாலச்சிறந்தது”) ராகு, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5
பொருந்தா எண்கள்: 9–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)