04.11.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள் திங்கட்கிழமை.
சுக்கிலபட்ச ஸப்தமி திதி காலை 06.23 வரை. அதன்மேல் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி. அமிர்தயோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் புனர்பூசம். சுபநேரங்கள் காலை 09.15 –10.15 மாலை 04.45 –05.45 ராகுகாலம் காலை 07.30 –09.00 எமகண்டம் 10.30 –12.00 குளிகைகாலம் 01.30 –03.00 வாரசூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) திருவோண விரதம். ஸ்ரீமந் நாராயணனை வழிபடல் நன்று. துர்காஷ்டமி.
மேடம் :அமைதி, சாந்தம்
இடபம் :தடை, இடையூறு
மிதுனம் :வெற்றி, அதிர்ஷ்டம்
கடகம் :நட்பு, உதவி
சிம்மம் :தனம், சம்பத்து
கன்னி :அச்சம், பகை
துலாம் :புகழ், பெருமை
விருச்சிகம் :லாபம், லக் ஷ்மீகரம்
தனுசு :சோதனை, கஷ்டம்
மகரம் :முயற்சி,முன்னேற்றம்
கும்பம் :காரியசித்தி,அனுகூலம்
மீனம் :புகழ், செல்வாக்கு
இன்று ஐப்பசியில் திருவோணம். பொய்கையாழ்வார் திருநட்சத்திரம். ஆழ்வார்க ௌன்றால் திருமாலின் அருட் கடலில் அழுந்தி திளைத்து ஆழகால்பட்டவர்கள் என்பர். விஷ்ணுவின் கையில் உள்ள சங்காகிய பாஞ்ச கன்னியத்தின் அம்சமாக இவ்வுலகில் அவதரித்தவர். பிறந்த ஊர் காஞ்சிபுரம். அருளிய பிரபந்தம் முதல் திருவந்தாதி. செய்ய துலாவோணத்தில் செகத்துதித்தான் வாழியே! வையம் தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே! வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே! வேங்கடவர் திருமலையை விரும்பும் அவன் வாழியே! பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே! பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே! நாளை ஐப்பசி அவிட்டம் பூதத்தாழ்வார் திருநட்சத்திரம் தொடரும்.
("மனம் உறுதியாக இருந்தால் சுண்டெலி கூட யானையை தூக்க முடியும் –ரஸ்ஸல்)
ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் – 5,6,3,9
பொருந்தா எண்கள் – 2,8,4,1
அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு கோயில்)