30.10. 2019 ஸ்ரீவிகாரி வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கிலபட்ச துவிதியை திதி காலை 6.50 வரை அதன் மேல் திரிதியை திதி பின்னிரவு 5.46 வரை. பின்னர் சதுர்த்தி திதி (திதி அவமாகம்) அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 2.04 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி. சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) சுபமுகூர்த்த நாள். பூசலார் நாயனார் குருபூஜை.
மேடம் : புகழ், பெருமை
இடபம் : திறமை, முன்னேற்றம்
மிதுனம் : உயர்வு, செல்வாக்கு
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : தனம், இலாபம்
கன்னி : பக்தி, ஆசி
துலாம் : சிரமம், தடை
விருச்சிகம் : விவேகம், வெற்றி
தனுசு : கவனம், எச்சரிக்கை
மகரம் : அன்பு, பாசம்
கும்பம் : இலாபம், லஷ்மீகரம்
மீனம் : பாசம், அன்பு
ஸ்கந்த சஷ்டி விரதம். மூன்றாம் நாள். முருகன் சூரனை சம்கரித்து அவனுக்கும் அனைவருக்கும் அருள்புரிந்த தினம் சஷ்டியாகும். “சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார்” என்பார்கள். சங்கரன் சிவன், சஷ்டி– திதி, மாவறுத்தல்– மாமரமாக நின்ற சூரனை சம்கரித்தல், சூரன் போர். சூர சம்ஹாரம் என்றும் வழங்கப்படும். உபவாசமிருந்து முருகப்பெருமானை வழிபடல் நன்று. ‘முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல் தந்துணர் வென்றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுஞ் குருபுங் கவ வெண் குண பஞ்சரனே’– கந்தர் அநுபூதி
(“அன்பு என்பது போர் போன்றது. துவக்குவது சுலபம் நிறுத்துவது கடினம்” – மென்சென்)
குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5
பொருந்தா எண்கள்: 6 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்:– மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)