08.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் புரட்டாதி மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
சுக்கிலபட்ச தசமி திதி மாலை 5.45 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. திருவோ ணம் நட்சத்திரம் பின்னிரவு 11.32 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்தயோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: புனர்பூசம், பூசம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 3.00 – 4.30 எமகண்டம் 9.00 – 10.30 குளிகைகாலம் 12.00 – 1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) விஜயதசமி வித்யாரம்பம், வேதாரம்பம், திருவோண உபவாஸம். வேதாந்த தேசிகள் திருநட்சத்திரம். திருவேங்கடமுடையான் வழிபாடு. கேதார கௌரி விரதாரம்பம். ஸமீ விருட்சப் பூஜை மானம்பூ உற்சவம்.
மேஷம் : இலாபம், லஷ்மீகரம்
இடபம் : நிறைவு, பூர்த்தி
மிதுனம் : நிறைவு, விருத்தி
கடகம் : வரவு, ஆதாயம்
சிம்மம் : அன்பு, இரக்கம்
கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்
துலாம் : நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் : மறதி, பொருள் நஷ்டம்
தனுசு : உதவி, நட்பு
மகரம் : வெற்றி, யோகம்
கும்பம் : பொறுமை, அமைதி
மீனம் : காரியசித்தி, அனுகூலம்
புரட்டாதி மாதம் ஸ்ரீ வெங்கடேச பிரம்மோற்சவத்தில் சேஷ வாகனத்தில் சேவை ‘சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புனையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம். புல்கும் அனையாம் திருமாற் கரவு முதல் திருவந்தாதி, பொய்கையாழ்வார். மகாலஷ்மியை மார்பில் தரித்துள்ள பெருமானுக்கு ஆதிசேடன் கிருஷ்ணாவதாரத்தில் உலவுகையில் குடையாக இருக்கின்றான். ஸ்ரீவைகுண்டத்தில் சிங்காசனமாக உள்ளான். இராமவதாரத்தில் திருவடியில் பாதுகையாக மாறியுள்ளான். திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் போது தெப்பமாக தாங்கியுள்ளான். திருமால் அடியார்க்கு மாணிக்க விளக்காய் தெரிகின்றான். பரந்தாமனை தழுவும் பரிவட்டமாக காட்சியளிக்கின் றான். இராமவதாரத்திலும் கிருஷ்ணவதாரத்திலும் சார்ந்திருக்கும் கைப்பிடியாக இலக்குமணன், பலராமனாக பிறப்பெடுத்துள்ளான். விஷ்ணு சேவைக்காகவே அவதரித்தவன் ஆதிசேஷன். (தொடரும்)
சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5
பொருந்தா எண்கள்: 8 – 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)