06.09.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆவணி மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கிலபட்ச அஷ்டமி திதி பின்னிரவு 2.28 வரை. அதன்மேல் நவமி திதி. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.39 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி. சித்தயோகம் பகல் 10.39 வரை. பின்னர் மரணயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பரணி, கார்த்திகை. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15 பிற்பகல் 2.00 – 3.00. ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளிகைகாலம் 7.30 – 9.00. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம் : தனம், சம்பத்து
இடபம் : உயர்வு, மேன்மை
மிதுனம் : புகழ், பெருமை
கடகம் : நிறைவு, பூர்த்தி
சிம்மம் : செலவு, விரயம்
கன்னி : பகை, விரோதம்
துலாம் : புகழ், பெருமை
விருச்சிகம் : லாபம், ஆதாயம்
தனுசு : மகிழ்ச்சி, சந்தோஷம்
மகரம் : அமைதி, தெளிவு
கும்பம் : லாபம், லக்ஷ்மீகரம்
மீனம் :காரியசித்தி, அனுகூலம்
ஜேஷ்டா அஷ்டமி, துர்வாஷ்டமி, மகாலக்ஷ்மி விரதாரம்பம் இன்று அனுஷம் நட்சத்திரம் மகாலக்ஷ்மி தாயாரை வழிபடல் நன்று. கலியுக முடிவின் பின் தோன்றும் கல்கி அவதாரத்தில் பகவானின் ரூப வர்ணனை நாளை முதல் விஷ்ணு ரூபம் என்ற தலைப்பில் தொடரும்.
(“சான்றோரிடம் காணப்படாதவை நான்கு. ஆராயாமல் வெறுத்தல், ஆதாரமின்றி முடிவு செய்தல், பிடிவாதம், ஆணவம். தன்னைத் திருத்திக் கொண்டவனே மற்ற மனிதரையும் அறிவு புகட்டி நடத்த வல்லவனாவான்” – கன்பூஷியஸ் சீனா)
சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் : 6 – 9
பொருந்தா எண்கள் : 3 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : நீலம், மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)