14.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் புதன்கிழமை
சுக்கில பட்ச சதுர்த்தசி திதி மாலை 4.37 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. உத்திராடம் நட்சத்திரம்காலை 7.04 வரை பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி. அமிர்த சித்தயோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் புனர்பூசம் சுப நேரங்கள் பகல் 10.45-–11.45, மாலை 4.45-–5.45, ராகுகாலம் 12.00-1.30, எமகண்டம் 7.30–-9.00, குளிகை காலம் 10.30-–12.00. வாரசூலம் வடக்கு (பரிகாரம் -பால்)
மேடம் : சிக்கல், சங்கடம்
இடபம் : பக்தி, அனுக்கிரகம்
மிதுனம் : பகை, விரோதம்
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : விருப்பம், ஆசை
கன்னி : ஜெயம், புகழ்
துலாம் : உதவி, நட்பு
விருச்சிகம் : தெளிவு, வெற்றி
தனுசு : மகிழ்ச்சி, சந்தோஷம்
மகரம் : தடை, தாமதம்
கும்பம் : சுகம், ஆரோக்கியம்
மீனம் : வரவு, லாபம்
திருவோணவிரதம். பௌர்ணமி விரதம் தெகிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் பகல் சத்திய நாராயண பூஜை அன்னதானம் நடைபெறும். எதிர்வரும் 23.08.2019 வெள்ளிக்கிழமை இரவு கிருஷ்ணாஸ்டமி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமியன்று பாட வேண்டிய கண்ணன் தாலாட்டு, பெரியாழ்வார் அருளிச் செய்த முதற்பத்து நான்காம் திருமொழி சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவனையும் நானும் அரைத் தொடரும் அங்கன் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் செங்கன் கருமுகிலே! தாலேலோ! தேவகிச் சிங்கமே தாலேலோ! வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே. (தொடரும்).
புதன் கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.அதிர்ஷ்ட எண்கள் 2,1,5.
பொருந்தா எண்கள் 8,7.
அதிர்ஷ்ட வர்ணங்கள் வெளிரான மஞ்சள், நீலம்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)