12.06.2019 ஸ்ரீவிகாரி வருடம் வைகாசி மாதம் 29 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கிலபட்ச தசமிதிதி முன்னிரவு 7.51 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 1.24 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. மரணயோகம் பகல் 1.24 வரை பின்னர் சித்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரட்டாதி, உத்திரட்டாதி. சுபநேரங்கள் பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30. ராகுகாலம் 12.00–1.30 எமகண்டம் 7.30–9.00 குளிகை காலம் 10.30–12.00. வாரசூலம்–வடக்கு (பரிகாரம்–பால்) பாபஹர தசமி.
மேடம் : பக்தி, ஆசி
இடபம் : இன்பம், மகிழ்ச்சி
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : அன்பு, ஆதரவு
சிம்மம் :காரியசித்தி, அனுகூலம்
கன்னி : பயம், விரயம்
துலாம் : வரவு, வஸ்திரலாபம்
விருச்சிகம் : ஊக்கம், உயர்வு
தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்
மகரம் : அமைதி, நட்பு
கும்பம் : போட்டி, வெற்றி
மீனம் : விவேகம், வெற்றி
நாளை சுக்கிலபட்ச ஸர்வ ஏகாதசி விரதம். இதற்கு “நிர்ஜய ஏகாதசி” என்று பெயர். உபவாஸமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. இம்மாதம் இரண்டு விசாகம் நட்சத்திரங்கள் நிகழ்வதால் கஜேந்திர மோட்சம், நம்மாழ்வார் ஜனன திருநட்சத்திரம் எதிர்வரும் 15 சனிக்கிழமை எனக்கொள்க.
(“அவசரப்பட்டு வார்த்தைகளை வெளியிடுபவர்களைப் போன்றும் தீய செயல்களைச் செய்யும் முட்டாள்கள் வேறு யாரும் இல்லை”–பைபிள்)
குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3–9–5–1
பொருந்தா எண்கள்: 6–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிவப்பு, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)