03.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை
அமாவாஸ்யை திதி மாலை 4.17 வரை. அதன் மேல் பிரதமை திதி. ரோகிணி நட்சத்திரம் பின்னிரவு 1.07 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸை. அமிர்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரங்கள் காலை 9.30 –10.30, மாலை 3.00 –4.00, ராகுகாலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 –12.00, வாரசூலம் கிழக்கு. (பரிகாரம் தயிர்)
மேடம் : நற்செயல், பாராட்டு
இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் : அமைதி, சாந்தம்
கடகம் : தோல்வி, கவலை
சிம்மம் : இலாபம், லக் ஷ்மீகரம்
கன்னி : பொறுமை, நிதானம்
துலாம் : சிக்கல், சங்கடம்
விருச்சிகம் : முயற்சி, முன்னேற்றம்
தனுசு : பக்தி, ஆசி
மகரம் : பிரிவு, சங்கடம்
கும்பம் : தனம், சம்பத்து
மீனம் : ஊக்கம், உயர்வு
இன்று ரோகிணி நட்சத்திரம். கண்ணன் அவதார திருநட்சத்திரம். ''கண்ணன் கழல் இணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திநாமம் திண்ணம் நாரணமே'' நம்மாழ்வார் 10.05 அமாவாஸ்யை பிண்டபித்ரு வைகாச ஸ்நான பூர்த்தி
(கோபம் என்பது கொடிய அமிலம். அது விழும் இடத்தை விட இருக்கும் இடத்தையே அதிகம் நாசமாக்கி விடும். பிரெஞ்சு பழமொழி)
குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)