23.05.2019 ஸ்ரீவிகாரி வருடம் வைகாசி மாதம் 09 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ண பட்ச பஞ்சமி திதி பின்னிரவு 5.38 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூராடம் நட்சத்திரம் காலை 6.43 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி. சித்தயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை. சுப நேரங்கள் பகல் 10.30– 11.30 மாலை 4.30– 5.30 ராகுகாலம் 1.30 –3.00 எமகண்டம் 6.00 –7.30 குளிகை காலம் 9.00 –10.30 வாரசூலம் தெற்கு (பரிகாரம் தைலம்) தனியநாள் சுப முகூர்த்த நாள்
மேடம் : நட்பு, மனநிறைவு
இடபம் : அன்பு, ஆதரவு
மிதுனம் : செலவு, பொருள்விரயம்
கடகம் : கோபம், பகை
சிம்மம் : அமைதி, தெளிவு
கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்
துலாம் : போட்டி, ஜெயம்
விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்
தனுசு : புகழ், பெருமை
மகரம் : சுகம், ஆரோக்கியம்
கும்பம் : பகை, விரோதம்
மீனம் : நிறைவு, மகிழ்ச்சி
கண்ணனின் திருமுகங்கள் ஆறு. ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேஷங்கள் 108 க்குள் 6 ஸ்தலங்கள் கிருஷ்ண சேத்திரங்களாக போற்றப்படுகின்றன. அவை 1.திருகண்ணபுரம் 2.திருக்கண்ணன்குடி 3.திருக்கோவலூர் 4.திருக்கண்ண மங்கை 5.கபிஸ்தலம் 6.துவாரகாபுரி 7.திருக்கண்ணபுரம் மூலவர் நீலமேகப் பெருமாள். சௌரிராஜன் கிழக்கே திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம் தாயார் கண்ணபுர நாயகி. விமானம் உத்பலா வதக விமானம். தீர்த்தம் “மெய்யனாரும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும் புறமே தொழுவார்க்கெல்லாம் செய்யில் வாளையுகலும் திருக்கண்ணபுரத்து ஐயன் ஆகத்தனைப்பார்கட்கு அணியனே” நம்மாழ்வார் திருவாய்மொழி (9–10–7) நாளை திருக்கண்ணங்குடி தொடரும்.
புதன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5–9
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)