19.04.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை மாதம் 6ஆம் நாள் வெள்ளிக்கிழமை
பௌர்ணமி திதி நாளை 5.27 வரை. அதன்மேல் பிரதமை திதி. சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 8.15 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி பௌர்ணமி. சித்தயோகம் கரிநாள். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, ரேவதி. சுபநேரங்கள் காலை 9.30 –- 10.30 , மாலை 4.30-–5.30. இராகு காலம் 10.30–-12.00 எமகண்டம் 3.00–-4.30, குளிகை காலம் 7.30-–9.00.
வாரசூலம் மேற்கு. பரிகாரம் வெல்லம். பௌர்ணமி விரதம். தெஹிவளை விஷ்ணு ஆலயத்தில் பகல் சத்தியநாராயண பூஜை, அன்னதானம். சித்திரா பௌர்ணமி, சித்திர குப்த பூஜை, இசைஞானியார் குருபூஜை, திருமாலிருஞ் சோலை ஸ்ரீ கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பறத்துடன் வைகை எழுந்தருளல்
மேடம் : வரவு, இலாபம்
இடபம் : சிக்கல், சங்கடம்
மிதுனம் : நோய், வருத்தம்
கடகம் : பகை, விரோதம்
சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி : போட்டி, ஜெயம்
துலாம் : பகை, பயம்
விருச்சிகம் : நட்பு, உதவி
தனுசு : தடை , இடையூறு
மகரம் : மகிழ்ச்சி, நிறைவு
கும்பம் : இலாபம், ஆதாயம்
மீனம்: சுகம், இன்பம்
'ஸ்ரீ வைஷ்ணவம்' மதுர கவியாழ்வார் திருநட்சத்திரம். ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாளின்று. அருளிய பிரபந்தம் கண்ணி நுண் சிறுத்தாம்பு நம்மாழ்வார் புகழை சங்கப்புலவர்களோடு வாதாடி பாட வைத்தவர். அப்பாடல் சேமம் குருகையோ செய்யதிருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ ஈயாகுவதோ கருடற்கெதிரே இரவிக் கெதிரே மின்மினியாகுவதோ, நாயாகுவதோ, உறுவெம்புலி முன் நரியாகுவதோ, நரகேசரி முன் பேயாகுவதோ, அழகு ஊர்வசி முன் பெருமாள் வகுணா பரணன் அருள் கூர்ந்து மறையின் ஒரு சொற் பெறுமோ உலகிற் கவியே என்று நம் ஆழ்வார் புகழை தமிழ் சங்கப் புலவர்கள் வாயால் பாட வைத்தவர். (நாளை சைவசித்தாந்தம் தொடரும்)
சூரியன், சனி கிரகங்களின்
ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் 1-,5
பொருந்தா எண் 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)