மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

2023-06-02 10:55:19
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று வியாழக்கிழமை(1) தேர்த்திருவிழா இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றன. பின்னர் சுப வேளையில் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை (1) தேர் திருவிழா இடம்பெற்றது. இத் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை ( 2) ஆம் தீர்த்த திருவிழாவில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right