யாழ் இந்து திரிசாரணர் குழுவின் 6 சாரணர்களுக்கான திரிசாரணர் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் கூடிய சின்னம் தரித்தல் நிகழ்வு 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது.
திரிசாரணர் குழுவானது பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சாரணர் சேவையினை 26 வயது வரை தொடர்வதற்கான கட்டமைப்பாகும்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான வைத்தீஸ்வரன், கோகுலரமணன், சிவசங்கர், நிமல், டினுசாந்தன், கோபிராம் ஆகிய சாரணர்கள் திரிசாரணர்களாக உறுதியேற்பு எடுத்துக்கொண்டனர்.
யாழ். மாவட்ட முன்னைநாள் சாரண ஆணையாளர் செ.தேவரஞ்சன், யாழ். மாவட்ட சாரண உதவி மாவட்ட ஆணையாளர்களான கோ.சத்தியன் மற்றும் துற்ஜெயந்தன், சாரணர் தலமைசெயலக உதவி ஆணையாளர் அமல்ராஜ், யாழ். இந்துக் கல்லூரி சாரண ஆசிரியர் நிதர்சன், யாழ். இந்து திரிசாரண ஆசிரியர் சுஜீவன் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
யாழ் இந்து திரிசாரணர் குழுவானது 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய சாரணர்களுக்கான திரிசாரணர் குழுவாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- முகப்பு
- Photo Galleries
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திரிசாரணர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திரிசாரணர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு
2023-03-28 10:58:17
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க