8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம்,யாழ் மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன், ஆணையாளர் ஆர்.ஜெயசீலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் யாழ்ப்பாண வலய கல்விப் பணிப்பாளர் , மற்றும் யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமாகிய 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவரின் வரவேற்புரை இடம்பெற்றதோடு யோகா பயிற்சியும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் யோகா பயிற்சியில் கலந்துகொண்டோருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
- முகப்பு
- Photo Galleries
- யாழ். இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு
யாழ். இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு
2022-06-21 11:19:10
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க