bestweb

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி

2025-06-14 09:53:39
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி 13 ஆம் திகதி மாலை 5 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமாகி திருச்சொரூப ஆசீருடன் நிறைவுபெற்றது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில், 12 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெஸ்பர் ஆராதனைகளை கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றதுடன் பேராயர் பக்தர்களுக்கு புனித அந்தோனியாரின் திருசொரூப ஆசிர்வாதங்களை வழங்கினார்.

13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே. டி. அன்டனி ஆண்டகையும் கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகையும் ஒப்புக்கொடுத்ததுடன் பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசிர்வாதங்களையம் வழங்கினர். திருவிழா திருப்பலியில் பெருந்திரளான பக்தர்களும் குருமார்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right