உஸ்பெகிஸ்தான் பயணமானது இலங்கை பளுதூக்கல் குழாம்
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானின் டஷ்கென்ட் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வீரர்கள் , ஒரு வீராங்கனை மற்றும் அதிகாரிகள் 4 பேரைக் கொண்ட இலங்கை குழாத்தினர் இன்று உஸ்பெகிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.