மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுக்க விசேட திட்டம் - பொலிஸ் பேச்சாளர்

Published By: Gayathri

05 Feb, 2021 | 02:59 PM
image

(செ.தேன்மொழி)

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத்தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதை தடுப்பதற்கான திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

நாட்டில் தற்போது 90 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களின் தொகை படிப்படியாக அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

இந்த நிலைமைக்கு பிரதான காரணம் இளம் வயதினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றமையே.

இந்நிலையில்  இளம் வயதினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதென்றால், பாடசாலை மட்டத்திலிருந்தே அவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கலந்துரையாடப்பட்டது. 

அதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை மட்டத்தில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதன்போது இந்த செயற்பாடுகளுக்கு சாரணியர் அமைப்பினரும், இலங்கை செஞ்சிலுவை அமைப்பினரும்  மற்றும் தேசிய மாணவர் படையணியும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அத்மிரால் சரத் வீரசேகர தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ், லிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, கல்வி அமைச்சின் உறுப்பினர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர், சாரணியர் அமைப்பினர் மற்றும் தேசிய மாணவர் படையணியினரும் இணைந்துக் கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58