13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபையை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுதான் சாதகமான நகர்வாக இருக்கும் எனவும், இதுவே இந்திய அரசின் நிலைப்பாடாக உள்ளதென்பதையும் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் கிழக்கு மாகாணத்தின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருடன் நேற்று தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்தச் சந்திப்புகளில் 13 வது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், எதிர்கால வளர்ச்சி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக போர் சூழலில் பாதிக்கப்பட்ட விதவைகள், ஊனமுற்றோருக்கான வாழ்வாதார வாய்ப்புகள், மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கல்வித்துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகளை உருவாக்கிக்கொடுக்க இந்தியாவின் ஒத்துழைப்புகளை கேட்டுள்ள தமிழ் பிரதிநிதிகள் இருவரும், அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM