யாழில் நலன்புரி நிலையங்களிலுள்ள குடும்பங்களுக்கு காணி வழங்க அரசாங்கம் தீர்மானம்

Published By: Digital Desk 3

02 Feb, 2021 | 09:12 PM
image

(எம்.மனோசித்ரா)

யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி அற்ற குடும்பங்களுக்கு காணியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 700,000 ரூபாய் செலவில் 20 பேர்ச்சஸ் காணியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லையென்பது அடையாளங் காணப்பட்டுள்ளது.

தங்களது பிறப்பிடத்திற்கு அண்மையில் காணிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும் அப்பிரதேசங்களில் தற்போதுள்ள காணிகளின் பெறுமதிக்கமைய 700,000 ரூபாவிற்கு 20 பேர்ச்சஸ் காணியை பெறுவதற்கு சிரமம் எனத் தெரியவந்துள்ளது.

எனவே குறித்த தொகைக்கு அதிகரிக்காமல் அரச விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் பிரகாரம், 10 - 20 பேர்ச்சஸ் காணியை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கும், தொடர்ந்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து இடம்பெயர்ந்த குடும்பங்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32