(செ.தேன்மொழி)
களனி கங்கையில் நீரில்மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவகமுவ - மாபிடிகம பாலத்திற்கு அருகில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்களுள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிரிழந்த நிலையில் ,அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
காணாமல் போயிருந்த இளைஞர்களிருவரும் கடற்படையின் சுழியோடிகளால் இன்று செவ்வாய்கிழமை காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ரணால பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரும், கலேவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவத்தின் போது மது அருந்திக் கொண்டிருந்துள்ள நான்கு நண்பர்களுள் , ஒருவர் அதிக போதையின் காரணமாக களனி கங்கையின் கரையில் உறங்கியுள்ளதுடன் , மற்றைய இருவரும் நீராடிக் கொண்டே மது அருந்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM