அமெரிக்காவில் கறுப்பின சிறுமி மீது பொலிஸார் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளையின பொலிஸார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கறுப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும் நீண்டகாலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவின் ரோச்சஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை பொலிஸார் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர்.
அப்போது சிறுமி பொலிஸாரைத் தாக்கியதால் அவரைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில் பொலிஸார் அடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கைதுசெய்த வெள்ளையின பொலிஸ் அதிகாரியான அன்ரே அண்டர்சன் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரி கூறுகையில்,
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி எம்மைத் தாக்கியதால் அவரை பத்திரமாக அழைத்துச்செல்ல பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகவும், கறுப்பின சிறுமி என்று நாங்கள் பாகுபாட்டை பார்க்கவில்லையெனவும், அவரை வலுக்கட்டயாக நாங்கள் அழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM