ஊழல் தொடர்பான தரப்படுத்தல் சுட்டியில் இலங்கைக்கு 94 ஆவது இடம்

Published By: Digital Desk 4

29 Jan, 2021 | 08:48 PM
image

(நா.தனுஜா)

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தொடர்பான தரப்படுத்தல் சுட்டியில் இலங்கை 94 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த அரசாங்கங்கள் ஊழலை ஒழிப்பதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்றாமையே இந்தப் பின்னடைவிற்குக் காரணம் என்று அவ்வமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி நதீஷானி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சொத்து பொறுப்பு விபரங்களைப்  பகிரங்கப்படுத்துங்கள் : ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் | Virakesari.lk

ஒவ்வொரு வருடமும் ஊழலுக்கெதிரான உலகளாவிய வலையமைப்பான ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் 'ஊழல் தொடர்பான தரப்படுத்தல் சுட்டி' வெளியிடப்படுவது வழமையாகும்.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தொடர்பான தரப்படுத்தல் சுட்டி நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

மேற்படி தரப்படுத்தல் சுட்டியைத் தயாரிக்கும் போது, ஒவ்வொரு நாடுகளிலும் பதிவாகியுள்ள ஊழல் சம்பவங்களின் அடிப்படையில், அவற்றுக்கு 0 - 100 வரையில் புள்ளிகள் வழங்கப்படும். அதன்படி 0 என்ற புள்ளியைப் பெறுகின்ற நாடு ஊழல் உயர்வாக உள்ள நாடாகவும் 100 புள்ளியைப் பெறுகின்ற நாடு ஊழலற்ற தூய்மையான நாடாகவும் நிர்ணயிக்கப்படும்.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தரப்படுத்தல் சுட்டியின் பிரகாரம் இலங்கை 38 புள்ளிகளைப் பெற்று 94 ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை 2019 ஆம் ஆண்டில் 93 ஆவது இடத்திலும் 2018 ஆம் ஆண்டில் 89 ஆவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கைக்கு அண்மையிலுள்ள நாடுகள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை நோக்குகையில், இந்தியா 40 புள்ளிகளைப் பெற்று 86 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 31 புள்ளிகளைப் பெற்று 124 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 26 புள்ளிகளைப் பெற்று 146 ஆவது இடத்திலும் பூட்டான் 68 புள்ளிகளைப் பெற்று 24 ஆவது இடத்திலும் நேபாளம் 33 புள்ளிகளைப் பெற்று 117 ஆவது இடத்திலும் மாலைதீவு 43 புள்ளிகளைப் பெற்று 75 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தரப்படுத்தல் சுட்டியில் 88 புள்ளிகளைப் பெற்று நியூஸிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

அதாவது அவை ஊழலற்ற மிகவும் தூய்மையான நாடுகள் என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த அரசாங்கங்கள் ஊழலை ஒழிப்பதற்கான உறுதிமொழிகளை வழங்கியிருந்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே ஊழல் தரப்படுத்தல் சுட்டியில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைந்து வருவதற்கான மிகமுக்கிய காரணமாகும் என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை கிளையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி நதீஷானி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55