பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக்க வேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Digital Desk 4

29 Jan, 2021 | 04:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய அரசியலமைப்புக்கு அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக அமைக்கவேண்டும்.

அரசாங்கம் அவ்வாறு செயற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கு சம்பந்தப்படும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐ.தே.க வின் தேவைக்கு தடயவியல் அறிக்கை தயாரிக்கப்படவில்லை : லக்ஷ்மன்  கிரியெல்ல | Virakesari.lk

புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பு தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக அரசாங்கத்தினால் புதிய குழுவொன்றை நியமித்திருக்கின்றது. குறித்த குழுவுக்கு மக்களின் கருத்துக்களை வழங்க முடியும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளையும் வழங்குமாறு எமக்கு அறிவித்திருந்தது. இதுதொடர்பாக நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.

அத்துடன் அரசாங்கத்துக்கு நெருக்கமான சட்டத்தரணிகளைக்கொண்ட குழுவை நியமித்து அரசியலமைப்பொன்றை தயாரிக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு.

நியமிக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணிகள் தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. என்றாலும் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதாக இருந்தால், நாட்டில் இருக்கும் அனைத்து என மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக அமைக்கவேண்டும்.

ஏனெனில் பாராளுமன்றத்தில் அனைத்து இன மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அனைத்து கட்சிகளும் இருக்கின்றன. அரசாங்கம் அவ்வாறு செயற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கு சம்பந்தப்படும். 

அத்துடன் அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை கடிதம் ஒன்றின் மூலம் தெளிவாக அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கின்றது.

அனைத்து இன மக்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் ஆதரவில்லாமல் தயாரிக்கப்படும் அரசியலமைப்பினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அரசியலமைப்பு தொடர்பாகவும் விமர்சனங்கள் வருவதற்கு காரணமாக இருந்தது, சிறுபான்மை மக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தவறியமையாகும். அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57