மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி திறந்து வைத்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளரும், 'அம்மா' என அன்புடன் அதிமுக தொண்டர்களால் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி மறைந்தார்.
அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இவ்விடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு தீர்மானித்தது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை போல் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது.
அண்மையில் இந்த பணிகள் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் பங்குபற்றி பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி,' தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் அதிமுகவின் வெற்றியை ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்வோம்' என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM