யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று புதன்கிழமை சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ்.மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 26 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களிக்க, 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
அத்தோடு முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுயினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உளுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த யாழ்.மாநகர சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் முதல்வர் தனது பதவியை இழந்திருந்தார்.
இதனால் மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற போது புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM