இரு வாரங்களில் 1,089 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

Published By: J.G.Stephan

26 Jan, 2021 | 11:48 AM
image

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கடந்த 14 நாட்களுக்குள் 1,089 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றின் நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மேல்மாகாணத்தில் கடந்த 12 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதற்கமைய கடந்த 14 நாட்களுக்குள் 7,828 நிறுவனங்களை சுகாதார தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.  இதன்போது 6,739 நிறுவனங்கள் உரிய சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடித்திருந்ததுடன் ,1,089 நிறுவனங்களில் சுகாதார ஒழுங்கு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 909 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் , அவற்றுள் 821 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைவாகவும் , 88 நிறுவனங்கள் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு புறம்பாகவும் செயற்பட்டிருந்தன. அதற்கமைய இவ்வாறு சுகாதார சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள், முகாமையாளர்கள் உட்பட நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, மேல்மாகாணத்தை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் முகக்கவசம் அணியாமை தொடர்பில் இன்றுகாலை(26.01.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் 2,770 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08