வெளிநாடு செல்ல தாய் மறுத்ததால் 4 வயது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட யுவதி

Published By: J.G.Stephan

25 Jan, 2021 | 04:03 PM
image

(செ.தேன்மொழி)


மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு தாய் அனுமதிக்காததால் பெண்ணொருவர் அவரது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கலாவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரும் அவரது மகனும் சடலமாக மீட்கப்பட்டனர். பங்கலாவத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்த பெண்ணின் கணவன் மீன்பிடி தொழில் ஈடுபடுபவராவார். அவர் சம்பவ தினத்தன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளார். குறித்த பெண் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தனது மகனின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளதோடு , அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக அந்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் சென்று தொழில் புரிவதற்காக தனது தாயிடம் அனுமதிக் கேட்டுள்ளார். அதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்தமையினாலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 


குறித்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41