(எம்.எப்.எம்.பஸீர்)
கொவிட் 19 தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 20 நாட்களான சிசுவின் உடலை தகனம் செய்தமை தொடர்பில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (22.01.2021) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொவிட் 19 தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட தமது 20 நாட்களான சிசுவின் உடலை தகனம் செய்த முறையில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து குழந்தையின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சிசுவின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கொழும்பு 15 ஐ சேர்ந்த முஹம்மட் மஹ்ரூப் மொஹம்மட் பாஹிம் மற்றும் பாத்திமா சப்னாஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுவே இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளது. இம்மனுவில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆஜராகவுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜயசூரிய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஆரம்ப நிலை சுகாதார சேவை தொற்றுநோய் மற்றும் கொவிட் ஒழிப்பு விவகாரம் தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ள, சுகாதார அமைச்சின் செயலர் சஞ்ஜீவ முனசிங்க, வைத்தியர் அமல் ஹர்ஸ டி சில்வா மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
திடீரென மரணித்த சிசுவின் உடலை தகனம் செய்வதற்கான எவ்வித தேவையும் இருக்கவில்லை எனவும் கொவிட் 19 காரணமாக உயிரிழந்த 19 பேரின் உடல்கள் அவ்வேளையிலும் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM