(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து நேற்று புதன்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஹிக்கடுவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று மாலை பூரண சுகத்துடன் வீடு திரும்பி இருக்கின்றார்.
இருந்தபோதும் தான் வைத்தியர்களின் ஆலாேசனைக்கமைய ஒருவாரகாலம் வீட்டில் சுயதனிமையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொராேனா தொற்றுக்குள்ளாகி இருந்தபோது தனது ஆரோக்கியத்துக்காக பிராத்தனை செய்த நாட்டு மக்கள் மற்றும் மதத்தலைவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
மேலும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்வது, கொவிட் தொற்றுக்கு உறுதியான சிகிச்சை முறைமை ஒன்று உறுதிப்படுத்தப்படும் வரை நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். சமூக இடைவெளியை பேணி நடப்பதுடன் முகக்கவசத்தை அணிந்துகொண்டு எமது சமூக பொறுப்பை நிறைவேற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM