(நா.தனுஜா)
ஓய்வுபெற்ற மற்றும் பதவியிலிருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப்பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர். அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் தமது அதிகாரத்தினை வலுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை அனுமதிப்பது மீளமுடியாத ஒரு நிலையையே ஏற்படுத்தும்.
இதனூடாக ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் ஆகிய அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
இலங்கையில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் ஆகிய அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கை சிவில் நிர்வாக சேவையின் பெருமளவான முக்கிய பதவிகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவருவதாக பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கருத்துவெளியிட்டுள்ளனர். எம்மால் வெளியிடப்பட்ட அட்டவணையில் முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் முக்கிய அரச பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட 39 இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது ஒரு படிப்படியான பொறுப்பெடுத்தலாகும். அதுமாத்திரமன்றி ஜனாதிபதியின் கைகளை அதிகாரமயமாக்கல், உறவினர் ஆதரவுக்கொள்கை, நண்பர்களுக்கு அதிகாரம் வாய்ந்த பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்களை அரசாங்கப்பதவிகளுக்கு நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும். இதனூடாக ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM