நாடுகடந்த திபெத்திய அரசாங்கத்தினதும், திபெத்திய பாராளுமன்றத்தினதும் தேர்தலை சீர்குலைப்பதற்கு சீனா முயற்சி செய்வதாக திபெத்திய சமூகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் மேற்படி தேர்தல்களுக்கான வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் திபெத்திய சமூகத்தினர் வாக்களிப்பில் ஈடுபட்டபோது வாக்களிப்பு செயன்முறையையும் சில நாடுகளில் வாக்களித்தவர்களின் பெயர்களையும் சீனா அடையாளமிட முயன்றமைக்கான ஆதரங்கள் இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
மேலும் பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள திபெத்தியர்களும் ஜனவரி மாதம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஊடக அறிக்கைகளின் பிரகாரம், நேபாளத்தில் தேர்தல் நடத்துவதற்கு மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையேயான பிளவுகளைத் தீர்க்க சீன உயர் மட்டக் குழு ஒன்று டிசம்பர் 27 அன்று அந்நாட்டிற்கு விஜயம் செய்து திரும்பியது. இந்த விஜயத்தினை மக்கள் அறிந்ததோடு அதிருப்திகளையும் வெளியிட்டிருந்தனர்.
எனினும், பல சீன அதிகாரிகள், நேபாளத்திற்கு விமான மற்றும் நில வழிகள் வழியாக வருகை தந்திருந்ததோடு அவர்கள் தேர்தல்களை கண்காணிப்பதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டிருந்தனர்.
''பல தசாப்தங்களாக திபெத்திய சமூகம் இருப்பதைப் பற்றி சீனா கரிசனை கொண்டுள்ளது'' என்று தி எகனொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM