இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டனை எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவுபெறுகிறது.
இந்நிலையில், பெங்களூர் சிறையில் இருந்து 27ஆம் திகதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள போது, அவருக்கு கடந்த இரு நாட்களாக காய்ச்சல், இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை திடீரென மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள வைத்தியர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.
அதன்பின், பெங்களூரிலுள்ள பவுரிங் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சையளித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM