தகனம் செய்யும் விவகாரம்: உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா

Published By: J.G.Stephan

20 Jan, 2021 | 04:07 PM
image

கொரோனா தொற்றினால்  உயிரிழப்போர் விடயத்தைப் பொறுத்தவரையில், சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி ஒவ்வொருவரும் அவர்களது நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதனூடாக அவர்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கை நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்ததுடன், அதனால் ஏற்பட்ட சர்ச்சை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய பின்னணியின் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையினால் 1955 ஆம் ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 18 ஆவது சரத்தின்படி ஒவ்வொருவரும் தமது மதம் அல்லது நம்பிக்கையினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச ரீதியில் பல்வேறு சவால்களைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும் அது பிறரது நம்பிக்கைக்கு மதிப்பளித்தல் மற்றும் இரக்கம் காட்டுதல் ஆகிய குணவியல்புகளில் தாக்கத்தையோ இழப்பையோ ஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கத்தூதுவர்,

இந்த வைரஸ் தொற்றின் விளைவாக தமது அன்பிற்குரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56