(எம்.எப்.எம்.பஸீர்)
நெடுந்தீவில் இருந்து வடமேல் திசையில் சர்வதேச கடற்பரப்பிலிருந்து 8 கடல் மைல் தூரத்தில், சட்ட விரோத இந்திய மீனவப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கடர்படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த படகினையும் அதிலிருந்த இந்திய மீனவர்களையும் மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
கடற்படையின் தகவல்களுக்கு அமைய, சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய படகு கடற்படையினரின் எச்சரிக்கையை மீறி தப்பிச் செல்ல முயன்ற நேரம், கடற்படையின் தாக்குதல் படகுடன் மோதச் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் போது சமநிலையை இழந்து நீரில் மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
நெடுந்தீவில் இருந்து வடமேல் திசையில் சர்வதேச கடற்பரப்பில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் கூறினர்.
குறித்த இந்திய மீனவ படகானது சட்ட விரோத மீன் மீடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நேரம், கடற்படையின் படகை மீறிச் செல்ல முயன்ற நிலையில், மிக ஆபத்தான படகு செலுத்தும் முறைமைகளை சட்ட விரோத மீனவர்கள் கையாண்டதாக கடற்படையினர் கூறினர்.
இதன்போதே, கடற்படையினரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் குறித்த சட்ட விரோத மீனவப் படகு, கடற்படையின் படகுடன் மோதச் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்படகு சமனிலை குலைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் கடற்படையினர் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர்களைத் தேடும் நடவடிக்கை நேற்று இரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் சுழியோடிகளுடனான கப்பலும் படகொன்றும் குறித்த கடற்பரப்பில் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM