இராணுவப் பயிற்சியால் நாட்டின் எதிர்காலம் குழப்ப நிலைக்குச் செல்லும் - ஹசன் அலி 

Published By: Digital Desk 4

19 Jan, 2021 | 05:13 PM
image

(எம்.மனோசித்ரா)

18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனையானது மிகவும் ஆபத்தானதாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் நாடு குழப்ப நிலைக்கு முகங்கொடுக்கக் கூடும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர ஒழுக்கமுடைய சமூகமொன்றை உருவாக்குவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சளிப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகக் கூறியிருக்கிறார். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விடயமாகும்.

இவ்வாறான செயற்திட்டங்களின் ஊடாக இராணுவ தன்மையிலான சிந்தனை நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தும். எனவே இது போன்ற பயிற்சிகளை வழங்குவதற்கு முன்னர் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

இராணுவ பயிற்சி மூலம் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் இராணுவ பயிற்சியை நிறைவு செய்து தற்போது உயர் அதிகாரங்களில் இருப்பவர்கள் பல்வேறு முரண்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அவதானித்து கொண்டு தான் இருக்கின்றோம். சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆயுத பயிற்சியை வழங்குவது நாட்டுக்கு ஆபத்தானது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31
news-image

இந்துமத அதியுயர் பீடத்தை நியமிக்கவுள்ள  இந்துமாமன்றம்

2026-09-08 01:07:11
news-image

எயார்பஸ் விசாரணை நல்லாட்சி காலத்திலேயே ஆரம்பம்;...

2026-09-08 01:02:52
news-image

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2026-09-08 01:00:07