கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ! 270 பேர் இதுவரை உயிரிழப்பு !

Published By: Digital Desk 4

18 Jan, 2021 | 09:11 PM
image

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 270ஆக அதிகரித்துள்ளது.

 இன்று பதிவான மரணங்களில் பலர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கொழும்பு 3 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும் முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவரும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புகளை பேணி 77 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் 332 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 53,409 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 45 820 பேர் குணமடைந்துள்ளதோடு 7324 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 717 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று இன்று  உறுதிப்படுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கி பழகியதை அடுத்து கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுய தனிமையில் இருக்க தீர்மானித்துள்ளார்.

கல்வி அமைச்சர் தனது குடும்பத்தாருடன் சுய தனிமையில் உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 8 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58