இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சில நாட்களில், ஜாவாவில் அமைந்துள்ள செமெரு என்ற எரிமலை வெடித்துள்ளது.
குறித்த எரிமலையானது சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் வெடித்துள்ளது.
இது ஜாவாவுக்கு மேலே 5 கிலோமீட்டருக்கும் அதிகமான சாம்பல் மற்றும் புகைகளை வானத்தில் பறக்கவிட்டுள்ளது.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான ஜாவாவில் இதுவரை வெளியேற்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் எரிமலையின் சரிவுகளில் வாழும் கிராமவாசிகள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேஷியா முழுவதும் 120 க்கும் மேற்பட்ட சுறுசுறுப்பான எரிமலைகளை அரசாங்க நில அதிர்வு ஆய்வாளர்கள் கண்காணிக்கின்றனர்.
இந்தோனேசியா பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" இல் அமர்ந்திருக்கிறது, அங்கு டெக்டோனிக் தகடுகள் மோதுகின்றன, இதனால் அடிக்கடி எரிமலை செயல்பாடு மற்றும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
பசிபிக் ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படுவதைத் தாண்டி, அதிக டெக்டோனிக் செயல்பாடுகளைக் கொண்ட இந்தோனேசியா, தொடர்ந்து பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மஜெனே நகரிலிருந்து வடகிழக்கில் ஆறு கிலோமீட்டர் (3.73 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 6.2 ரிச்டெர் அளிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 820 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM