(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதன் காரணமாக அங்கு புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அந்த பகுதிகளை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைக்கவேண்டிய நிலமை ஏற்படும் என்றும், அதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவும் , சில கிராமசேவகர் பிரிவுகளும், வீதிகள் மற்றும் தொடர்மாடி குடியிருப்புகள் மாத்திரமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 3,469 பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்கும் ,190 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் 178 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுள் 140 பேர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள், எஞ்சிய 38 பேரும் வெளிபிரதேசங்களிலிருந்து அங்கு வந்தவர்களாவர்.
இந்நிலையில் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அங்கு புதிய தொற்றாளர்கள் உருவாகுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அந்த பகுதிகளை நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கவேண்டிய நிலைமையே ஏற்படும். அதனால், அப்பகுதி மக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை , நீண்டகாலமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும். இதன்போது மக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கமைய அனைவரும் ஒன்றுக்கூடி உணவு உட்கொள்ளுதல், கலந்துரையாடுதல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒன்றுக்கூடி செயற்படுவதால் மீண்டும் அந்த பகுதிகளில் வைரஸ் பரவலடைவதற்கான வாய்புள்ளது. அதனால் அத்தகைய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்களை அடையாளம் காணுவதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மேல்மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முக்ககவசம் அணியாமை தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,605 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM