தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
13 பெண்களும் 41 ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.
கைதின்போது மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக வழக்கு ஹிங்குராங்கொட நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினர்.
நேற்று மாலை இடம்பெற்ற கைதின் பின்னர் இவர்களுள் 38 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
இதேவேளை முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 2,605 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM