விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது

Published By: Vishnu

18 Jan, 2021 | 07:52 AM
image

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

13 பெண்களும் 41 ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.

கைதின்போது மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக வழக்கு ஹிங்குராங்கொட நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினர்.

நேற்று மாலை இடம்பெற்ற கைதின் பின்னர் இவர்களுள் 38 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.

இதேவேளை முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 2,605 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06