இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ 

Published By: Priyatharshan

06 Aug, 2016 | 09:54 AM
image

தமிழ் பேசும் மக்­களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்­கு­ரலாய் வழி­காட்­டியாய் சிறப்­புற்று விளங்கும் வீர­கே­சரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அக­வையின் நிறைவில் காலடி எடுத்து வைக்­கின்­றது. இது தமிழ் பேசும் இத­யங்­க­ளுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்­தி­யாகும்.

தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தினமும் உலக நடப்­பு­க­ளையும் மற்றும் முக்­கிய விட­யங்­க­ளையும் தரு­வ­தோ­டல்­லாமல் தமிழ்மொழி பண்­பாடு, கலா­சாரம், பொரு­ளா­தாரம், சமூக முன்­னேற்றம் ஆகிய அனைத்துத் துறை­யிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்­தி­ருந்த வர்த்­த­க­ரான ஆவ­ணிப்­பட்டி பெரி. சுப்­பி­ர­மணியம் செட்­டியார் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி புதன்­கி­ழமை வீர­கே­சரியை ஆரம்­பித்தார். அவ­ருக்கு தமி­ழ­கத்தில் இருந்து கொழும்பில் வாழ்ந்­தி­ருந்த எச்.நெல்­லையா என்­ப­வரும் மற்றும் பல பெரி­யார்­களும் பெரிதும் உத­வி­யாக இருந்தனர்.

பாரத தேச­பிதா மகாத்மா காந்­தி­ய­டிகள் அக்­கா­ல­கட்­டத்தில் இலங்கை வந்து சுற்­றுப்­ப­யணம் செய்து உரை­களை ஆற்றிச் சென்ற போதும் அவ்­வி­ட­யங்கள் குறித்து தமிழ் மக்கள் ஏதும் அறி­யா­தி­ருந்த சூழ்­நிலை உண­ரப்­பட்­டதே வீர­கே­சரிப் பத்­தி­ரிகை உரு­வாக பிர­தான உந்­து­த­லாக அமைந்­தி­ருந்­தது.

வீர­கே­ச­ரியின் இலட்­சியம் எது­வாக இருக்கும் என்­ப­தனை சுப்­பி­ர­ம­ணியம் செட்­டியார் வீர­கே­ச­ரியின் முதல் இதழில் திட்­ட­வட்­ட­மா­கவே குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அதை இங்கு குறிப்­பி­டு­வது மிகவும் பொருத்­த­மா­ன­தாகும்.

“எம்மைப் பற்றி நாமே எழுதிக் கொள்­வதில் எமக்கு சிறி­தேனும் விரும்­ப­மில்லை. ஆயினும் புதி­தாகத் தோன்றும் பத்­தி­ரிகை தனது நோக்­கத்தை முதல் வெளி­யீட்டில் தெரி­விக்க வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு செய்­வது உலக வழக்கு. ஆகையால் கீழ்­கண்ட சில­வற்றை எழு­த­ மு­யன்றோம்.

தன்னால் இயன்ற அள­வுக்கு பொது ஜனங்­க­ளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவா­வினால் தூண்­டப்­பட்டே வீர­கே­சரி தோன்­று­கிறான். அசாத்­தி­ய­மான காரி­யங்­களைச் செய்து முடிக்கும் திறன் படைத்­தவன் என்று வீறு பேசத் தயா­ராக இல்லை. நியாய வாய்ப்பை எட்­டு­ணையும் மீறாமல் நடு­நிலையில் இருந்து உல­கத்தின் முன்­னேற்­றத்­திற்­கான இயக்­கங்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் பரி­வுடன் ஆராய்ந்து பொது­மக்கள் கருத்தை நல்­ல­மு­றையில் உரு­வ­கப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தையே வீர­கே­சரி தன் முதல் கட­னாக கொள்­கின்றான்.

தாராள சிந்­த­னையும் பரந்த நோக்­கமும் சம­ரஸ உணர்வும் பெற்ற வீர­கே­சரி சாதிஇ சமய சண்­டை­களில் கலந்­து­கொள்­ள­மாட்டான். நியா­யமே அவன் வீற்­றி­ருக்கும் பீடம். அவ­னது கருத்­துக்கள் நியா­யத்­தையே அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்கும். மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக் கொண்டு உயர்ந்த நோக்­குடன் வெளி­வரும் வீர­கே­சரி தமிழ் மக்­களின் அன்­பையும் ஆத­ர­வையும் நாடு­கின்றான்.

இவ்­வா­றான ஆசி­ரி­ய­ரது நோக்கு ஒரு தார­க­மந்­தி­ர­மா­கவே கடந்த 86 வரு­டங்­க­ளாக கடைப்­பிக்­கப்­பட்டு வரு­வதை வாச­கர்கள் நன்­கு­ணர்­வார்கள். இத்­த­கை­ய­தொரு தனித்­துவ வர­லாற்­றினை கொண்டு வீர சிங்­க­மென நிமிர்ந்து, இந்­நாட்டின் தமிழ்ப் பேசும் இனத்­துக்கு விசே­ட­மா­கவும் நாட்டு மக்­க­ளுக்குப் பொது­வா­கவும் சேவை புரிந்­து­வரும் வீர­கே­ச­ரியின் வாழ்க்கைப் பயணம் இலே­சா­ன­தல்ல. அவன் சந்­தித்த சோத­னைகள் பலப்­பல. அது­போன்று சாத­னை­களும் ஏராளம் என்­பதில் பெருமை கொள்­ளலாம்.

செட்­டி­யா­ர­வர்கள் குறிப்­பிட்­டது போன்று நடு­நிலை தவ­றாமல் நின்று தமிழ் பேசும் மக்­க­ளுக்­காக பக்­கஞ்­சா­ராது உள்­ளது உள்­ள­படி செய்திச் சேவையை தினமும் வழங்­கி­ய­தோடு மட்­டு­மன்றி அவர்கள் மீது பரிவு கொண்டு பற்­பல அறி­வு­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை வீர­கே­சரி இந்த 86 வருட காலத்தில் அவ்­வப்­போது உரிய காலத்தின் தேவைக்கு இணங்க மேற்­கொண்­டு­வந்­தது யாவரும் அறிந்­ததே.

இதன் பயனாய் பல்­வேறு பத்­தி­ரி­கைகள் தோன்றிச் சேவை புரிந்­ததை மறக்க முடி­யாது. ஜோதிஇ மித்­திரன்இ மித்­திரன் வார­மலர், நவீன விஞ்­ஞானிஇ லஸ்­ஸன வந்­கம, விது­மின உட்­பட சில பத்­தி­ரி­கைகள் 1960 களில் தோற்றம் பெற்றுச் சேவை­பு­ரிந்­தன.

இவை தவிர இந்­நாட்டு எழுத்­தா­ளர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் நோக்கில் வீர­கே­சரி சிறு­கதைப் போட்­டி­களை நடத்­தியும் மற்றும் நட­வ­டிக்­கைகள் மூலமும் செயற்­பட்­டமை என்றும் நினை­வு­கூ­ரத்­தக்­கது. அத்­துடன் வீர­கே­சரி 1970 களில் மேற்­கொண்ட மாதம் ஒரு நாவல் பிர­சு­ர­ திட்டம் அக்­கா­லத்தில் வாச­கர்­களால் மிகவும் வர­வேற்­கப்­பட்ட ஒன்­றாகும். இதன் மூலம் ஆக்க இலக்­கிய கர்த்­தாக்கள் பெரு­ம­திப்பைப் பெற்­றார்கள்.

நாட்டின் அர­சியல் விட­யங்­களை குறிப்­பாக தமிழ் மக்­களின் அர­சியல் உரிமைப் போராட்­டங்­களில் மிகுந்த ஆர்வம் காட்டி உட­னுக்­குடன் செய்­தி­களை வழங்­கி­ய­தோடு மட்­டு­மன்றி காலத்­துக்குக் காலம் எழும் அர­சியல் உரிமைப் போராட்­டங்­களில் அனைத்து அர­சியல் தரப்­பி­ன­ரதும் கருத்­துக்­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் திரட்டி வெளி­யி­டு­வதன் மூலம் அவர்­க­ளுக்கு ஒரு வழி­காட்­டி­யா­கவும் திகழ்ந்து வந்­தி­ருக்­கி­றது. இன்றும் அதன் பணி சோர்­வின்றி தளர்­வின்றித் தொட­ரு­கின்­றது.

இந்த அய­ராத பொது­மக்கள் பணியில் பத்­தி­ரிகை ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்து பத்­தி­ரிகை நிர்­வா­கி­களும் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களும் சிறப்­பாகக் கட­மை­யாற்றி பத்­தி­ரி­கையின் பெயரை மக்கள் மத்­தியில் ஆழப்­பதித்­தி­ருக்­கி­றார்கள்.

இந்தவகையில் அன்­றைய கால­கட்­டத்தில் சுப்­பி­ர­மணியம் செட்­டி­யா­ரோடு எச். நெல்­லையா, ஈஸ்­வர ஐயர் போன்­றோரும் 1960 களின் பின் டி.பி.கேசவன், கிருஷ்­ண­மூர்த்தி, ஹரோல்ட்­ பீரிஸ், எம்.ஜி.வென்­சஸ்லாஸ் போன்­றோரும் பெரும் சேவை­யாற்­றினர். இன்­றைய காலக்­கட்­டத்தில் குமா­ர் ­ந­டேசன் முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ராக பெரும் சேவை புரிந்­து­வ­ரு­கின்றார்.

பத்­தி­ரிகை பிர­தம ஆசி­ரி­யர்­க­ளாக கே.பி. ஹரன், கே.வி. எஸ்.வாஸ், கே.சிவப்­பி­ர­காசம், சிவ­னே­சச்­செல்வன், எஸ்.நட­ராஜா ஆகியோர் பணி­பு­ரிந்து வழி­காட்­டி­யி­ருக்­கி­றார்கள். ஈ.வி.டேவிட் ராஜூ, எம்.எஸ்.எம்.கார்­மேகம், இரா­ஜ­கோபால் ஆகி­யோரின் பணியும் இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.

காலத்­துக்கு காலம் வேலை­நி­றுத்தம் உட்­பட நெருக்­க­டி­களை வீர­கே­சரி எதிர்­நோக்­கிய போதும் முகா­மை­யா­ளர்கள்இ ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊழி­யர்­களின் அய­ராத உழைப்­பினால் வீர­கே­சரி மக்கள் மனதில் அழி­யாத இடத்தைப் பெற்­றது. மிகுந்த செல்­வாக்­குடன் அதன் பணி மேலும் முன்­னோக்கிச் செல்­கின்­றது.

எக்­ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் என்ற கம்­பனிப் பெய­ருடன் நிறை­வான சேவையை தின­ச­ரி­யா­கவும் ஞாயிறு வார­வெ­ளி­யீட்டின் மூல­மா­கவும் மக்­க­ளுக்கு வழங்கி அரு­மை­யான தோழனாய் பிர­கா­சிக்கும் வீர­கே­சரி, 1990 களில் தகவல் நவீன தொழில்­நுட்­பத்­துக்குள் பிர­வே­சித்­தமை மேலும் பல படிகள் முன்­னேற வழி­வ­குத்­தது. இந்த நவீன வச­தி­களைப் பயன்­ப­டுத்தி வீரகேசரி ஸ்தாபனம் பல பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றமை பெருமைக்­குரியது.

“விடிந்தால் வீரகேசரி” என்று காத்திருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இத்தாபனம் மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சோதிட கேசரி, கலைக்கேசரி, சுட்டிகேசரி, ஜீனியஸ் என்பவற்றை பிரசுரித்து வழங்கி அவர்தம் ஆற்றலையும் வளர்த்து வருகின்றது.

தமிழ் பேசும் மக்களின் குரலாய் விளங்கும் வீரகேசரியின் பயணமும் மிக மிக நீண்டது. ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி பெருவிருட்சமாய் விளங்கும் வீரகேசரி மேலும் நூற்றாண்டுகள் காலம் நிலைத்து நிற்க தமிழ் பேசும் மக்கள் என்றும் துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13
news-image

தேவைப்படுவது தமிழ் மைய அரசியலே

2025-01-19 15:18:20
news-image

சேமிப்பாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய விதத்தில் புதிய நிதியியல்...

2025-01-19 15:13:50
news-image

அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை விடவும் சமூகத்தின்...

2025-01-19 15:06:36
news-image

புதிய அரசியல் யாப்பு அறிமுகமாகுமா?

2025-01-19 14:50:05
news-image

முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்கள்

2025-01-19 14:42:18
news-image

புதிய தலைமையில் பொருண்மிய மீட்சி பெறுமா...

2025-01-19 14:08:55
news-image

மீண்டும் பலமடையும் விமானப்படை

2025-01-19 13:46:36