சிரியா மீது இஸ்ரேல். மேற்கொண்ட விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினரும், வெளிநாட்டு போராளிகள் பலரும் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு சிரியா ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இவர்களை அழிக்க இஸ்ரேல் இராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமான தாக்குதல் நடத்துவதுண்டு.
இந்நிலையில், சிரியாவில் உள்ள அல்பு கமல் மாகாணம் மற்றும் டெரி இசோர் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சிரியா படையினர், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM