(எம்.மனோசித்ரா)
தெற்காசியாவின் பாரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ஹொரணையில் திறந்து வைக்கப்பட்டது.

புதிய தொழிற்சாலை ஹொரணையில் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன், தொழிற்சாலையின் பெரும்பாலான தயாரிப்புகள் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழிற்சாலை சிறிய கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து பிரிவுகளுக்கும் டயர்களை தயாரிக்கும். இதன் கீழ் ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




