இங்கிலாந்துக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 22 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் இடம்பிடித்துள்ளார்.
தொடை எலும்பு காயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கையின் கடைசி டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட மெத்தியூஸ், நுவான் பிரதீப், ரூஷென் சில்வா மற்றும் லக்ஷன் சண்டகன் ஆகியோருடன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த அணியில் ஆட்டமிழக்காத ரமேஷ் மெண்டிஸும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதேநேரம் தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜிதா, சந்தூஷ் குணதிலகே மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தென்னாபிரிக்காவுடனான தொடரில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு காலியில் ஆரம்பமாகவுள்ளது.
Srilanka Squad: Dimuth Karunaratne (Captain), Kusal Janith Perera, Dinesh Chandimal, Kusal Mendis, Angelo Mathews, Oshada Fernando, Niroshan Dickwella, Minod Bhanuka, Lahiru Thirimanne, Lasith Embuldeniya, Wanindu Hasaranga, Dilruwan Perera, Suranga Lakmal, Lahiru Kumara, Vishwa Fernando, Dushmantha Chameera, Dasun Shanaka, Asitha Fernando, Roshen Silva, Lakshan Sandakan, Nuwan Pradeep, Ramesh Mendis
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM