உயர் நீதிமன்ற தீ பரவல் - பொறுப்புக்கூற வேண்டிய ஐவர் குறித்து விசாரணை

Published By: Digital Desk 4

12 Jan, 2021 | 08:51 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ பரவலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என நம்பப்படும்  ஐந்து சந்தேகநபர்கள்  தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றக்கட்டடத் தொகுதியில் பரவிய தீ, மின்சாரக் கசிவினால் அல்லது எரிபொருள் விசிறப்பட்டதால்  ஏற்பட்டது அல்ல என அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை ஊடாக  உறுதியாகியுள்ள நிலையில்  இந்த ஐவர் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த தீ பரவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளும் தொடரும் நிலையில் இந்த 5 பேர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற கட்டடத்தில் சேதமடைந்த, அகற்றப்பட்ட பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47