'உக்ரைன் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா கொத்தணி தோற்றம் பெறாது': அரசாங்கம் உத்தரவாதம்

Published By: Digital Desk 8

12 Jan, 2021 | 03:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கொவிட்-19 வைரஸ் கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக செயற்படுத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் பாரிய பங்களிப்பு செலுத்துகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சேவையில் 30 இலட்சத்துக்கு மேற்பட்டோர்  ஈடுப்பட்டுள்ளார்கள். இவர்களின்  வாழ்க்கைத்தரம் பல வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி வரை உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் 1,004 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்,  இவர்களில் 3 பேர் மாத்திரம் கொவிட்-19வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பிரயாணிகளினால் கொவிட்-19 கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைவருக்கும் பொதுவானது. சுற்றுலாப் பிரயாணிகளுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் இவ்விடயத்தில் வழங்கப்படவில்லை. ஆகவே உக்ரைன் பயணிகள் குறித்து எதிர்தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் பொய்யானது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின், சுற்றுலாத்துறையினை நெருக்கடியான நிலையில் ஆரம்பிக்க வேண்டும். குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் அபிவிருத்தி செய்யப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை வெற்றிக் கொள்வது கட்டாயமாகும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20